ராஜபக்ஷவினரால் முழு நாடும் ஸ்தம்பிதமடைந்துள்ளது! – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

ஆட்சியாளர்களின் தவறான தீர்மானங்களினால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் நிலைமை மோசமாகும் என எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தை எச்சரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தின் நடவடிக்கைகளால் முழு நாடும் தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *