இங்கிலாந்தில் பத்தாண்டுகளுக்குள் பொது மருத்துவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய சரிவை சந்திக்கும்!

இங்கிலாந்தில் ஒரு தசாப்தத்திற்குள், பொது மருத்துவர்களின் நான்கில் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகள் காலியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது

தற்போதைய 4,200 பற்றாக்குறை 2030-31ஆம் ஆ;டுக்குள் 10,000க்கும் அதிகமாக உயரும் என்று ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆய்வு கூறுகிறது.

பொது மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் போராடும் என்று சிந்தனையாளர் குழு நம்புகிறது, அதே சமயம் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இது ஒரு பெரிய பற்றாக்குறையை உருவாக்கும்.

2024ஆம் ஆண்டுக்குள் 6,000 கூடுதல் பொது மருத்துவர்களை நியமிக்க அரசாங்கம் உறுதியளித்துள்ளது. ஆனால், அதை நிறைவேற்ற முடியாமல் திணறி வருவதாக அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்தத் தொழிலில் நுழையும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஆனால் தற்போதைய போக்குகளின்படி, பொது மருத்துவர்கள் ஓய்வு பெறுவது அல்லது பகுதி நேரப் பணியை நோக்கிச் செல்வதன் மூலம் இது ஈடுசெய்யப்படும் என்று பகுப்பாய்வு கூறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *