இலங்கை வரும் எரிவாயு கப்பல்

கொழும்பு, ஜூன் 30

4 மாதங்களுக்கு தேவையான ஒரு இலட்சம்
மெட்ரிக் தொன் எரிவாயுவைக் கொள்வனவு
செய்வது தொடர்பான ஒப்பந்தம் இன்று (30)
கைச்சாத்திடப்படவுள்ளது.

லிட்ரோ நிறுவனத்துக்கும் உலக வங்கிக்கும்
இடையிலான ஒப்பந்தம் மூலமே இந்த
எரிவாயு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட
குழு பிரதிநிதியான முன்னாள் அமைச்சர்
சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த எரிவாயுவின் மொத்தப் பெறுமதி 90
மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
லிட்ரோ நிறுவனத்தினால் 20 மில்லியன்
டொலர்கள் வழங்கப்படவுள்ளது.

இதன்படி எரிவாயு ஏற்றிய கப்பல்கள் ஜூலை
6, 10, 16, 19 மற்றும் 21 ஆகிய திகதிகளில்
இலங்கையை வந்தடையத்
திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *