எரிபொருள் நெருக்கடி : முடங்கும் நிலையில் நாடு

எரி­பொருள் விநி­யோக நட­வ­டிக்­கைகள் தற்­போது மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அளவில் நடை­பெற்று வரு­வதால் முழு நாடும் முடங்கும் நிலை உரு­வாகி வரு­கி­றது.

குறிப்­பாக நாட்டின் சகல பகு­தி­க­ளிலும் வாகனப் போக்­கு­வ­ரத்து வெகு­வாக குறை­வ­டைந்­துள்­ளது. தலை­நகர் கொழும்பின் நகர, புற­நகர் பகு­தி­களில் மட்­டு­மல்­லாது வாகன நெரிசல் அதி­க­மாகக் காணக்­க­டிய நாட்டின் ஏனைய நக­ரங்­க­ளிலும் வாகனப் போக்­கு­வ­ரத்து குறை­வ­டைந்­துள்­ளது.

சிபெட்கோ எரி­பொருள் நிரப்பு நிலை­யங்கள் ஊடாக அத்­தி­ய­வ­சிய சேவை பிரி­வி­ன­ருக்கு மாத்­திரம் எரி­பொ­ருளை வழங்­கு­மாறு அர­சாங்கம் கடந்த 27 ஆம் திக­தி­யன்று உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தது. இதன்­படி, சுகா­தார சேவைப் பிரி­வினர், ‍பொதுப் போக்­கு­வ­ரத்து பிரி­வினர், ரயில்வே திணைக்­கள பிரி­வினர் மற்றும் முப்­ப­டை­யினர் ஆகி­யோ­ருக்கு மாத்­தி­ரமே எரி­பொருள் வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

இந்த தீர்­மா­னத்தால், தனியார் போக்­கு­வ­ரத்து துறையை நம்பி தமது அன்­றாட பய­ணங்­களை மேற்­கொள்­ப­வர்கள் மற்றும் சேவை­களை பெற்­றுக்­கொள்­வோரும் பெரும் அவஸ்­தையை அனு­ப­வித்து வரு­வ­தாக புத்தி ஜீவிகள் பலரும் கருத்து தெரி­வித்து வரு­கின்­றனர்.
எரி­பொருள் இல்­லா­ததன் கார­ண­மாக நாடு தானா­கவே முடங்கும் நிலையை அடைந்து வரு­வ­தா­கவும், மனிதன் உயிர் வாழ்­வ­தற்கு உணவு, உடை, உறையுள் ஆகிய மூன்­றுமே இன்றி அமை­யாத விட­யங்கள் என கூறு­வார்கள். ஆயினும், தற்­போது இது மாறி­யுள்­ளது. தற்­போது நம் நாட்டு மக்கள் பலரும் உண­வின்றி, உடை­களை மாற்­றாது, வீடு­களில் படுத்­து­றங்­காது நாடோ­டிகள் போல் அங்­கு­மிங்கும் அலைந்து திரி­கின்ற நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

நாட்டில் எரி­பொருள் பற்­றாக்­குறை கார­ண­மாக அத்­தி­ய­வ­சிய ‍சே‍வை பிரி­வி­ன­ருக்கு மாத்­திரம் எரி­பொ­ருட்­களை விநி­யோ­கிப்­ப­தற்கு அர­சாங்கம் எடுத்த தீர்­மா­னத்­தினால் போக்­கு­வ­ரத்து துறை­களில் ஈடு­படும் பஸ் சார­திகள் மற்றும் நடத்­து­னர்கள், முச்­சக்­கர வண்டி சார­திகள், மோட்டார் சைக்­கிள்­களில் உணவு மற்றும் பொதிகள் விநி‍­யோ­கிப்­ப­வர்கள், வாடகைக் கார் ஓட்­டு­நர்கள் என போக்­கு­வ­ரத்துத் துறையை தொழி­லாகக் கொண்­ட­வர்கள் பெரிதும் பொரு­ளா­தார நெருக்­கடிக்கு முகங்­கொ­டுத்­துள்­ளனர்.

அத்­தி­ய­வ­சிய சேவை பிரி­வி­ன­ருக்கு மாத்­திரம் எரி­பொ­ருளை வழங்­கு­மாறு அர­சாங்கம் விடுத்­துள்ள உத்­த­ரவு எதிர்­வரும் ஜூலை 10 ஆம் திகதி வரை நடை­மு­றையில் காணப்­படும். எனினும், இந்த உத்­த­ரவு தொடர்ந்து நீடிக்­கப்­பட்டால் நாடு பெரும் மோச­மான விளை­வு­களை சந்­திக்க நேரிடும் என ‍ அச்சம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆகவே, எரி­பொருள், எரி­வாயு உள்­ளிட்ட அத்­தி­ய­வ­சிய பொருட்­களை தடை­யின்றி மக்கள் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் காலம் தாழ்த்தாது வெகு விரைவில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். மேலும், நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்வதற்கு அரசியல் ரீதியான முடிவுகளை எடுப்பதற்கு அரசியல் தலைவர்கள் காத்திரமான தீர்மானங்களை எடுப்பது அவசியம் என புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.- Vidivelli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *