யாழ்பாணம் – 340 கே.கே.ஸ் வீதியை சேர்ந்த ஜி.எ.ம். ரிஷ்வானின் மகளான, 12 வயதினை உடைய, பாத்திமா ரிமாசா என்ற சிறுமி காணாமல் போயுள்ளார்.
இவர் காணாமல்போன அன்று நீல நிற ஆடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இச் சிறுமி முஸ்லிம் பாடசாலை ஒன்றில் தரம் 8ல் கல்வி கற்பதாகவும், கடந்த 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று கடை ஒன்றில் நின்ற சமயமே குறித்த சிறுமி காணாமல் போனதாகவும், யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்