
கொழும்பு, ஜூன் 30
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழுவின் இலங்கை விஜயம் இன்றுடன் நிறைவடைகின்றது.
10 உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த 20 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்வதற்கு இலங்கைக்கு வழங்கப்படக்கூடிய நிதி உதவிகள் குறித்து கலந்துரையாடும் வகையில் குறித்த குழுவினர் வருகைத்தந்தனர்.
இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையில் எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் புதிய உடன்பாடு எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 5 பில்லியன் டொலர்களை கடனாக பெறுவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது