நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்.

இலங்கை தமிழர்களை மீட்ட மரைன் பொலிஸ் ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் 4 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை இலங்கை தமிழர்கள் 96 பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *