
இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டதின் ஆரம்பம் மழை, கடும் காற்று காரணமாக தாமதமாகியுள்ளது.
காலியில் நேற்று இப்போட்டி ஆரம்பமாகியது. இரண்டாவது நாளான இன்று மழை காரணமாக இதுவரை ஆட்டத்தை ஆரம்பிக்க முடியவில்லை.
தற்காலிக பார்வையாளர் அரங்கு ஒன்று, கடும் காற்று காரணமாக சரிந்து வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது
இப்போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 212 ஓட்டங்களைப் பெற்றதுடன், நேற்றைய ஆட்டமுடிவின்போது அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 98 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
பிற செய்திகள்