முன்னாள் SSP கீர்த்திரத்னவின் நீதிப் பேராணை மனு விசாரணைக்கு!

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வலுவிலக்க செய்யக் கோரி கேகாலை முன்னாள் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.பி கீர்த்திரத்ன உள்ளிட்ட நான்கு காவல்துறை உத்தியோகத்தர்கள் நீதிப் பேராணை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி, இந்த மனுக்கள் மீதான ஆட்சேபனைகளை அடுத்த மாதம் 8 ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு பிரதிவாதி தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *