திருமலையில் உள்நாட்டு துப்பாக்கியுடன் 4 பேர் கைது

திருமலை, ஜுன் 30

திருகோணமலை, பேரமடு காட்டுப் பகுதியில் வைத்து சட்டவிரோதமாக அனுமதியின்றி உள்நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த 4 பேரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் அக்போகம பகுதியைச் சேர்ந்த ஈருவரையும், கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக வனஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பிராந்திய வனஜீவராசி அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகலின் அடிப்படையிலேயே சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக வனஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களிடமிருந்து உள்நாட்டு துப்பாக்கி, கத்தி, துப்பாக்கி குண்டுகள், மருந்துகள் மற்றும் லைட் போன்றனவும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *