துறைமுக செயற்பாடுகளுக்கு பாதிப்பு இல்லை

கொழும்பு, ஜூலை 30:

இலங்கை துறைமுக அதிகாரசபையின் (SLPA) துறைமுக எரிபொருள் களஞ்சியத்தில் போதுமான அளவு எரிபொருள் சேமிப்பில் இருப்பதாகவும் அதனால் துறைமுகத்தின் செயற்பாடுகளுக்கு எந்த தடையும் இல்லை ன்றுன இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பிரசாந்த ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் சுமூகமாக இடம்பெற்று வருவதாகவும், எரிபொருள் களஞ்சியசாலையில் 32,000 மெட்ரிக் டன் எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து, துறைமுகத்தின் பணிகளுக்கு இடையூறு ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது என்றும், துறைமுகத்தின் அனைத்துத் துறைகளினது நடவடிக்கைகளுக்கு ஊழியர்கள் வினைத்திறனான வகையில் பங்களிப்பார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *