கோட்டாவால் மக்களுக்கு நல்லதை செய்ய முடியாது! – ஜேவிபி

‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும். அதுவரை நாம் ஓயபோவதில்லை. எமது ஆட்டம் தொடரும்.’

இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

‘மக்களால் வீடு செல்லுமாறு வலியுறுத்தப்படுபவர்தான் கோட்டா, மக்களால் விரட்டியடிக்கப்பட்டவர்தான் ரணில், இவர்கள் இருவராலும் நாட்டை ஆள முடியாது. மக்களுக்கு நல்லதை செய்ய முடியாது.’ – எனவும் அநுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் சர்வதேசம் எமது நாட்டுக்கு உதவும், ஆனால் எம்மை தூக்கிவிடாது. நாம்தான் எழ வேண்டும். அதற்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்க தேசிய மக்கள் சக்தி தயார். தேர்தல் நடத்தப்படும்வரை இடைக்கால அரசை பொறுப்பேற்கவும் தயார்.’ எனவும் அவர் அறிவிப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *