
நாட்டில் தற்போது எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்,யாழ்ப்பாணம் சங்கானைப் பிரதேசத்தில் எரிபொருள் விநியோகம் சரியான முறைப்படி மேற்கொள்ளப்படுவதாக சங்கானை கூட்டுறவு சங்க தலைவர் கேசவதாசன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிலையங்களில் மோசடி ஏற்பட்டு வருகின்ற நிலையில் சங்கானை கூ ட்டுறவு சங்கத்தினர் சரியான முறையில் எரிபொருளை வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக சித்தன்கேணி சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இவ்வாறான செயற்பாடுகள் சீராக இடம்பெற்று வருகிறது.
.
இந்நிலையில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான சரியான நுட்பங்களை மேலும் விரிவுபடுத்த எண்ணியுள்ளளோம்.எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்கள் போதுமான அளவு ஆதரவினை தருகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறான பணிகளை மேற்கொள்வதற்காக சங்கானை பிரதேச செயலகம் தொடர்ந்தும் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.
பிற செய்திகள்