ஐஓசி நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம்

கொழும்பு, ஜுலை 01

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நேற்றைய தினம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

70 தாங்கி ஊர்திகள் நேற்று எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக, இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தமது எரிபொருள் நிரப்பு நிலைய வலையமைப்புக்கு, திருகோணமலையிலிருந்து முன்னெடுக்கப்படும் விநியோகத்தை அதிகரிப்பதற்காக, மேலதிக எண்ணெய் தாங்கி ஊர்திகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *