வாகனங்களுக்கான வருமான வரிப்பத்திர விநியோகத்தில் மட்டுப்பாடு

கொழும்பு, ஜுலை 01

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வாகன வருமான வரிப் பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல் மாகாண செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல் மாகாண செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வாகன வருமான வரிப் பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 29 ஆம் திகதி முதல் காலாவதியாகும் மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வாகன வருமான வரிப் பத்திரங்களை புதுப்பிக்கும் போது இந்த மாதம் 29 ஆம் திகதி வரை தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *