
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் சைக்கிள்களை திருடிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக சைக்கிள்களைத் திருடிய சந்தேகநபர் ஒருவரை CCTV உதவியுடன் பொலிஸார் கைது செய்தனர்.
இதனையடுத்து, இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 5 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதுடன் 15 சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.