
கொழும்பு, ஜுலை 02
உடன் அமுலாகும் வகையில் பணிக்கு சமூகமளிக்காது போனால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடபட்டுள்ள நபர்கள் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கு எழுத்து மூலம் இன்று அறிவிக்கவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.