‘பட்டினிச்சாவில் இருந்து மக்களை காப்பீர்’ யாழில் கையெழுத்துப் போராட்டம்

‘பட்டினிச்சாவில் இருந்து மக்களை காப்பீர்’என்ற தொனிப்பொருளில் மாபெரும் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

யாழில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 10 .00 மணியாளாவில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவை கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தது.

கையெழுத்துப் போராட்டம் பொருளாதார நெருக்கடியில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை யாழ்.மாவட்ட அரச அதிபருக்கு மகஜர் ஒன்றினை எதிர்வரும் திங்கட்கிழமை சமர்ப்பிப்பதற்காக நடாத்தப்பட்டிருந்தது .

மேலும் ”மக்களை பட்னிச் சாவிலிருந்து மீட்போம் ” எனும் தொனிப்பொருளில் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து துண்டுப்பிரசுரங்களை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1.பதுக்கல் மற்றும் கொள்ளை இலாபங்களில் இருந்து மக்களை பாதுகாக்க கட்டுப்பாடு விலைகளை நடைமாறைப்படுத்தி இறுக்கமாக செயற்பட வேண்டும்.

2.மருந்து, மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்தல் மற்றும் மாவட்ட அரச பொது மருத்துவமனைகளுக்கு தடையின்றி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுத்தல்

3.நீண்ட வரிசையில் மக்களை நிற்க வைக்காமல் அதற்குரிய இலகு பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

4.விவசாயம், கடற்தொழில், சுகாதாரத்துறை போன்றவற்றில் கடமை புரிபவர்களுக்கு தடையில்லாமல் எரிபொருளை வழங்க வேண்டும்.

5.பசி, பட்டினி சாவினை தவிர்க்க வீட்டுத்தோட்டம், சமூக தோட்டங்களை உருவாக்க அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என கூறி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *