
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு மின்தடை எரிவாயு தட்டுப்பாடு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கள் காரணமாக மக்கள் தமது அன்றாட கடமைகளை கூட பூர்த்தி செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இல்லத்தரசிகள் தற்போது காலை நேரக் கடமைகளில் ஒன்றாகப் பன்னாடை பொறுக்குதல் பலருக்கு மாறி விட்டது.
மண்ணெண்ணையை லீற்றர் 87 ரூபாவாக வைத்துள்ளனர். ஆனால் ஒரு சொட்டும் வாங்க முடியாது.பன்னாடையைக் கழிவுப் பொருளாகப் பார்த்த காலம் மலையேறி அடுப்பு மூட்டுதலுக்குக் கைகொடுக்கும் தெய்வமாகி விட்டது.
மனித வாழ்க்கையில் கழிவென நிரந்தரமாக எதுவேமேயில்லை. உயர்ந்தவை எல்லாம் ஒரு நாள் தாழும் தாழ்ந்தவையெல்லாம் உயரும் என்ற பொதுமொழிக்கு அமைய யாழ்ப்பாண இல்லத்தரசிகளின் நிலை மாறி வருகின்றது.
பிற செய்திகள்