22 வது திருத்தத்தில் அத்தியாவசிய விடயங்கள் உள்ளடக்கப்படவில்லையென குற்றச்சாட்டு

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தில் அத்தியாவசியமான பல விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என PAFRAL அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரதமருடனான் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் உள்ள பல்வேறு சாதகமான விடயங்கள் 22 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்படவில்லை என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது மக்கள் ஆணைக்கு முரணானது என குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது தொடர்பிலான மக்களின் எதிர்பார்ப்பு 22ஆவது திருத்தச் சட்டத்தில் இடம்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்

ஜனாதிபதிக்கு அதிகாரங்களை அதிகரிக்கும் வகையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *