இயற்கை கடல் தடாகத்தில் நீராட சென்ற 22 வயது இளைஞர் மாயம்

திக்வெல்ல,ஜுலை 02

திக்வெல்ல, செத்தகல இயற்கை கடல் தடாகத்தில் நீராட சென்ற 22 வயதான இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன 22 வயதான இளைஞர் ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் என பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த இளைஞரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *