அவுஸ்ரேலியாவுக்கு இழுவை படகில் சென்ற 51 இலங்கையர்கள் கைது!

அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 51 பேர் கொண்ட மற்றுமொரு குழுவை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது திருகோணமலை கடற்பரப்பில் வைத்து குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இந்த மோசடியில் ஈடுபட்ட 6 பேர் உட்பட 41 ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *