யாழில் உள்ளாடைகளுக்கு கடும் தட்டுப்பாடு; அதிர்ச்சியில் யாழ்ப்பாணிஸ்!

நாட்டில் தற்போது உருவாகியுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடான நிலை உருவாகியுள்ளதுடன் அதிக விலைகளில் இறக்குமதிப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் யாழில் தற்போது ஆடை விற்பனை நிலையங்களில் ஆண்களின் உள்ளாடைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதுடன் சில இடங்களில் அதிக விலைக்கு உள்ளாடைகள் விற்பனையாகி வருகின்றதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இதேவேளை நாடு தற்போது செல்கின்ற போக்கில் விரைவில் ஆடைகளை களைந்து காட்டுவாசிகள் போல உடையணியவேண்டிய நிலை விரைவில் உருவாகலாம் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *