
கர்ப்பிணி தாயொருவரை துரித நொடியில் புத்தள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவேண்டிய இக்கட்டான நிலையில், கற்பிட்டி இளைஞர்களின் தற்காப்பு செயற்பாடு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
கற்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு கர்ப்பிணி தாய் ஒருவர் அழைத்து வரப்பட்டார்.
அந்த தாய்க்கு தலை பிரசவம் என்பதால் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட வேண்டிய கட்டாயம் இருந்தாலும் தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு அந்த கர்ப்பிணி தாயையும் விட்டு வைக்கவில்லை.
இதன்போது, உடனடியாக செயல்பட்ட கற்பிட்டி இளைஞர்கள் Kalpitiya Talks என்னும் பல அவசர அவசிய சந்தர்ப்பத்தில் உதவும் கற்பிட்டியின் பிரபலமான வட்ஸ்அப் குழுமத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
சுமார் பத்து நிமிடங்களில் அந்த கர்ப்பிணி தாயை அழைத்து செல்ல கற்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கு வேன் ஒன்று விரைந்து வந்து அழைத்து செல்லப்பட்டார்.
இதற்கு முதலும் எரிபொருள் இல்லை என வைத்தியசாலை நிர்வாகம் கைவிரித்த நேரம் இந்த மனித நேய வட்ஸ்அப் குழுமத்தின் இளைஞர்களின் உதவியால் அவசர நோயாளிகள் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல தற்காப்பு ஏற்பாடுகளும் இந்த குழுமத்தின் மூலம் கற்பிட்டி இளைஞர்கள் மேற்கொண்டு வருவதும் பாராட்டத்தக்கதே.
பிற செய்திகள்