அம்பலாங்கொடை ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக எரிபொருள் பெறுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று அதிகாலை சிலரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் 2 நாட்களுக்கும் மேலாக எரிபொருள் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தது.
குறித்த உரிமையாளர் நேற்று அதிகாலை 2 மணியளவில் அவ்விடத்தை விட்டு வெளியேறியதாகவும், அப்போது எரிபொருள் வரிசையில் நின்றிருந்த ஏனையவர்களிடம் தனது மோட்டார் சைக்கிளை அவதானிக்குமாறு கூறிவிட்டு அவர் அவ்விடத்தை விட்டு தனது வீட்டிற்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஒருவர் மோட்டார் சைக்கிளை எரிபொருள் வரிசையில் இருந்து எடுத்துக்கொண்டு தப்பிச் சென்ற விதம் அருகில் உள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
பிற செய்திகள்