பஸ் – வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! இருவர் படுகாயம்

கட்டுபிட்டிய – ரம்புக்கனை வீதியில் வட்டேகெதர என்ற இடத்தில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த வேனின் சாரதியும் மற்றுமொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேனின் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *