கட்டுநாயக்கவில் துருக்கி விமானம் விபத்து

கொழும்பு, ஜூலை 05

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

330 ரக சரக்கு விமானம் துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து நேற்று இரவு 09.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

45 மெற்றிக் தொன் எடையுள்ள ஆடைகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு 11.30 மணியளவில் விமான நிலையத்திலிருந்து துருக்கிக்கு புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது.

விமானத்தில் ஏற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட கொள்கலன் சரியாக பிரேக் போடாமல் விமானத்தின் அருகில் நிறுத்தப்பட்டதால், விமானத்தின் என்ஜினுடன் கொள்கலன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சேதமடைந்த விமானத்தை மீட்கவோ அல்லது கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறவோ துருக்கி விமான அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *