எதிர்வரும் 3 நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு!

நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் நாளை மறுதினம் வரையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு நகர் பகுதிகளில் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MNOXYZ ஆகிய வலயங்களில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த விபரம்…

https://www.pucsl.gov.lk/wp-content/uploads/2022/07/Demand-Managmet-Schedule-from-06-08.07.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *