
கொழும்பு,ஜீலை 7
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம் முறைக்கேடான மருந்து விலைமனுக்கோரலில் குற்றவாளிகளாக பதியப்பட்டவர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதத்தில் உரிய அதிகாரிகள் செயற்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், அந்த சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடக குழு உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.