வவுனியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

கொழும்பு,ஜுலை 7

பாதுகாப்பான தொடருந்து கடவை அமைக்குமாறு கோரி வவுனியா, செட்டிகுளம் பொதுமக்களால் இன்று ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

செட்டிகுளம் – துடரிக்குளம் வீதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார்.

இந்நிலையில், குறித்த தொடருந்து கடவையை பாதுகாப்பானதாக அமைத்து தருமாறு கோரி இன்று பொதுமக்களால் அந்தப் பகுதியில் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *