
காலி – மாகால்லவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.