<!–
எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரயில் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்காக அரச அச்சக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, ரயில் கட்டணத்தை தற்போதைய பேருந்து கட்டணத்தைவிட குறைவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், அதன்படி, குறைந்தபட்ச கட்டணம் பத்து அல்லது இருபது ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.