
ஜூலை 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் கூடுதலாக 3000 பொலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் (IUSF) ஜூலை 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமது போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பமாகி கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகை நோக்கி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை, பிரதமரின் இல்லம் மற்றும் பொலிஸ் தலைமையகத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு விசேட அதிரடிப்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.