ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில் சற்று நேரத்திற்கு முன்னர் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
களனி பல்கலைக்கழகத்திற்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கோட்டை நோக்கி பேரணியாகச் சென்றுள்ளனர்.
மேலும் மாணவர்கள் அங்கு இன்று இரவு தங்கியிருந்து நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.