நாளைய போராட்டத்தில் கோட்டா அரசின் குளறுபடிகள்! – ஜேவிபி எச்சரிக்கை

நாளை இடம்பெறவுள்ள போராட்டத்தில , குழருப்படிகளை உருவாக்க அரச தரப்பினர் உத்தேசித்துள்ளனர் என ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் முதல் படியாக, பாதுகாப்பு செயலாளரிடம் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் போராட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கற்களை வீசி தாக்குதல் நடைபெற உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொய்யான செய்தி. உறுதி அற்ற தகவல்களை வெளியிட வேண்டாம், நம்பவும் வேண்டாம்.

அதே போல கானொளி ஒன்று வெளியாகியுள்ளது. நாளைய போராட்டத்தின் போது பெற்றோல் குண்டு எவ்வாறு செய்யலாம் என்று அந்த காணொளி மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் முழு நோக்கம் போராட்டத்தை குழப்புவதே ஆகும். அரசாங்கத்திற்கு நாங்கள் கூறுவது அமைதியான முறையில் இப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம். எனவே தயவுசெய்து இப் போராட்டத்தை குழப்ப வேண்டாம்.

மக்களாகிய நீங்கள் போராட்டம் மேற்கொள்ளும் போது அரசாங்கத்தின் கூலிப் படையினரின் குழப்பம் வர வாய்ப்புள்ளது. எனவே தயவுசெய்து மக்கள் அவதானத்துடன் இருங்கள்.- என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *