முதலாம் தரத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதி நீடிப்பு

முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால எல்லையை கல்வி அமைச்சு நீடித்துள்ளது.

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு, முதலாம் தரத்தில் மாணவர்களை சேர்க்க விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததுடன், ஜூலை 15 விண்ணப்ப முடிவு திகதியாக கல்வியமைச்சு அறிவித்திருந்தது.

இந் நிலையில் நாட்டின் சூழ்நிலையை கருதிற்கொண்டு விண்ணப்ப முடிவு திகதியை நீடிக்குமாறு பெற்றோர் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

அதன்படி, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *