
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை பதவி விலகக் கோரியும் பிரதமர் ரணில் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டம் நாளை (09) நடத்தப்படவுள்ள நிலையில், அது தொடர்பிலான பணிகளில் 9,126 பாதுகாப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ், இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என 9126 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள ஆவணம் ஒன்றின் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
6,296 பொலிஸாரும், 1,830 இராணுவத்தினரும் 1,000 சிவில் பாதுகாப்பு படையினரும் இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
12 மணி நேர சேவை வேலை நேரத்தைக் கொண்ட இரு குழுவினராக இவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கடமையில் ஈடுபடுத்தபப்டும் 6,296 பொலிஸ் உத்தியோகத்தர்களில் 8 பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 24 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், 86 உதவி பொலிஸ் அத்தியட்சர்கள், 392 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள், உப பொலிஸ் பரிசோதகர்கள், 5,582 பொலிஸ் கான்ஸ்டபிள்கள், 200 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தகக்து.
பிற செய்திகள்