இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் ரொஷான் மஹாநாம நாளையதினம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள பாரிய அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்
‘எமது சொந்த வாழ்வுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் ஜூலை 9 ஆம் திகதி திட்டமிடப்பட்ட வன்முறையற்ற போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து இலங்கையர்களையும் அவர்களின் இன மற்றும் மத வேறுபாடுகளின்றி நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்