
கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறவிருந்த பாகிஸ்தானின் பயிற்சி போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இந்த வார இறுதிப் போட்டிகள் அனைத்தையும் ஒத்திவைக்க SLC போட்டிக்குழு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், அவுஸ்திரேலியா – இலங்கைக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் இடம்பெறுவதில் எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்