
கொழும்பு, ஜூலை 9:
3 ,700 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று நள்ளிரவு நாட்டை வந்தடைய உள்ளது.
மேலும், எதிர்வரும் 11, 16 ஆம் திகதிகளில். 3,700 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய 2 கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த மாதத்திற்குள் 30,000 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுகுள் வரவுள்ளது.
ஒரு இலட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக அண்மையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் லிட்ரோ நிறுவனம் உடன்படிக்கை கைச்சாத்திட்டது குறிப்பிடத்தக்கது.