கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் சில விரிவுரையாளர்களின்
தகாத செயல்களால், அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் இடைவிலகுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில், கொத்தலாவல பாதுகாப்பு துணைவேந்தர் மிலிந்த பீரிஸ் பாதுகாப்பு அமைச்சிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும் தெரியவருகையில்,
கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவரொருவரை, கழிப்பறை கிண்ணத்தில் கையை வைத்து கழுவுமாறு விரிவுரையாளர் ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, அந்த மாணவரின் தந்தையான பேராசிரியர், தனது பிள்ளையின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி பல்கலையிலிருந்து இடைநிறுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி, முப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளில் ஒருசில பெண் அதிகாரிகளும் மற்றும் சிரேஷ்ட மாணவர்களின் தொல்லைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்குள்ள சில அதிகாரிகளின் தகாத செயற்பாடுகளினால் பல்கலைக்கழகத்தின் கௌரவம் பாதிக்கப்படுகிறது என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்