தலைக்கவசத்தை கழற்றி வீசி ஆர்ப்பாட்டத்தில் இணைந்த பொலிஸ்

கொழும்பு, ஜுலை 9

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்துப் பொலிஸார், பொலிஸ் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.

அதனை ஓர் ஓரத்தில் நிறுத்திவைத்துவிட்டு, தலைக்கவசத்தை கழற்றி வீதியில் வீசிவிட்டு, “அரகலயட்ட ஜயவே வா” (​போராட்டத்துக்கு வெற்றி) எனக் கோஷமெழுப்பி, ஆர்ப்பாட்டத்துடன் கைக்கோர்த்துக்கொண்டார்.

பொலிஸ் மோட்டார் சைக்கிள் அவ்விடத்திலேயே நிற்கிறது. தலைக்கவசம் கீழே விழுந்து கிடக்கிறது. பொலிஸ் அதிகாரியோ, போராட்டக்காரர்களுடன் கைகோர்த்து கொழும்பை நோக்கி வந்துகொண்டிக்கின்றார்.   அவர், மஹரகமவில் வைத்தே, போராட்டக்காரர்களுடன் இணைந்துகொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *