கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாய் மத்தி பகுதியில் டீசலை விற்பனை செய்தமை மற்றும் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
விசேட படையணியினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிசார் விற்பனை செய்ய முற்பட்ட ஒரு லீற்றர் டீசலை கைப்பற்றினர்.
இதனை அடுத்து குறித்த டீசலை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கோப்பாய் மத்தியை சேர்ந்த 47 வயதான ஒருவரை சந்தேக நபராக கைது செய்ததோடு குறித்த நபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 102 லீற்றர் டீசலும் கோப்பாய் பொலிசாரால் மீட்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பிற செய்திகள்