கிரிகெட் மைதானத்தை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள்

கொழும்பு, ஜுலை 9

இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், சற்றுமுன் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டகாரர்களால் குறித்த மைதானம் சுற்றிவளைக்கப்பட்டதோடு அங்கிருந்து அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டகாரர்களால் குழப்பமான நிலை உருவாகியது.

இதனையடுத்து, பாதுகாப்பு தரப்பினரால் குறித்த ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *