நாட்டை வழிநடத்த தெரியாவிட்டால் வேறொருவருடன் ஒப்படைத்து வீட்டுக்கு திரும்புங்கள்- சுகிர்தன் கோரிக்கை!

அரசாங்கத்திற்கு எதிரான சைக்கிள் பேரணி ஒன்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் இன்று காலை ஆரம்பமானது.

குறித்த சைக்கிள் பேரணி தொடர்பில் கருத்து தெரிவித்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டுமக்கள் பிரதான கோசமானது இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற தெரியாத ஒரு ஜனாதிபதி இந்த நாட்டுக்கு தேவையில்லை வீட்டுக்கு போக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இனவாத முறையோடு ,குடும்ப ஆட்சி செய்யும் தலைவர்கள் எங்களுக்கு தேவையில்லை , உங்களுக்கு நாட்டை வழிநடத்த தெரியாவிட்டால் ,சரியாக வழிநடத்தும் ஒருவரிடம் ஒப்படைத்து வீட்டுக்கு திரும்புங்கள் அத்துடன் இன்று இலங்கை ஒரு மாற்றத்தை எதிர் பார்த்து கொண்டிருக்கின்ற ஒரு நாள் என்று கூறலாம் காலியில் நடக்கும் போராடத்திற்கு ஆதரவாகவே இங்கு சைக்கிள் பேரணியை மேற் கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்

அத்துடன் இப்படிப்பட்ட ஒரு அரசாங்கம் இருப்பதை விட இல்லாது இருப்பதே மேல் , இந்த ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்கு வராது ,எப்போழுது இந்த அரசாங்கத்தில் மாற்றம் வருகின்றதோ அன்றுதான் எங்கள் முடிவுகளிலும் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தனர் .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *