
கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே போராடும் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப் பிரயோகம், வானை நோக்கிய துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்னர், கொழும்பு சத்தம் வீதியில் போராட்டக்காரர்களால் பொலிசாரின் நீர் பீரங்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த நீர் பீரங்கியில் இருந்த கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் என்பன தற்போது போராட்டக்காரர்களின் கைகளில் சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கண்ணீர் புகை மற்றும் கைத்துப்பாக்கிகளை பொலிஸார் இழக்க நேரிடும் என போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்