போராட்ட காரர்களை குறிவைக்கும் படையினர்!

அராசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நடத்தப்பட்டு வரும் போராட்ட தற்போது தீவிர நிலையை அடைந்துள்ளது.

குறிப்பாக, நீர்த்தாரைப் பிரயோகம், கண்ணீர்ப்புகைத் தாக்குதல், துப்பாக்கிச்சூடு இவை அனைத்தையும் தாண்டி போராட்டம் மேலும் வலுவடைந்து வருகின்றது.

அத்துடன் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், போராட்டக் களத்தில் கடமையில் ஈடுபட்டு வரும் படையினர், பொலிஸார் உள்ளிட்டோர் போாராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை, போராட்டத்தினை வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர்.

ஆங்காங்கே ஒரு சில படையினர் கையடக்க தொலைபேசியின் ஊடாக இவ்வாறு வீடியோ காட்சிகள், புகைப்படங்களை பதிவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் இந்த போராட்டம் மேலும் சூடுபிடிக்கின்றது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *