
ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதையடுத்து, ஜனாதிபதி செயலகத்திற்குள் உள்ள நீச்சல் தடாகத்தில் போராட்டக்காரர்கள் நுழைந்து நீராடிக் கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
ஜனாதிபதி மாளிகைக்குள்ளும் போராட்டக்காரர்கள் உள்நுழைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.