காலி மைதானத்திற்கு வெளியே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

இலங்கை மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவரும் காலி மைதானத்திற்கு வெளியே, எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது காலி மைதானத்திற்கு வெளியே ஒரு குழுவினரால் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும், குறித்த ஆர்ப்பாட்டத்தினால், நடைபெற்றுவரும் போட்டிக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, நூற்றுக்கணக்கானோர் அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு காலி- கோட்டை பகுதியில் இருந்து, கோஷங்களை எழுப்பு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *