நுவரெலியாவில் மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியா,ஜுலை 9

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து சீரற்ற காலைநிலை காரணமாக மலையுடனான கடுமையான கற்றும் வீசி வருகிறது. இன்று பிற்பகல் வீசிய காற்று காரணமாக நுவரெலியா – பதுளை வீதியில் உள்ள பாரிய மரம் முறிந்து விழுந்துள்ளது.

இதனால் நுவரெலியா – பதுளை ,நுவரெலியா – ஹட்டன் பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மரத்தை வெட்டி அகற்றி வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக சாலையோரங்களில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது .பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது விழுந்து அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *